"நான் ராஜாதி ராஜன்டா முடிஞ்சா அடிச்சு பாருடா" நடுரோட்டில் டையலாக் பேசி சாகசத்தில் ஈடுபட்ட முதியவர்!

"நான் ராஜாதி ராஜன்டா முடிஞ்சா அடிச்சு பாருடா" நடுரோட்டில் டையலாக் பேசி சாகசத்தில் ஈடுபட்ட முதியவர்!

"நான் ராஜாதி ராஜன்டா முடிஞ்சா அடிச்சு பாருடா" என மதுபோதையில் முதியவர் ஒருவர் நடுரோட்டில் நடத்திய நாடகம் காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது. 

இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வழிவிடு முருகன் கோயில் சந்திப்பு சாலையில், நேற்று மாலை மதுபோதையில் முதியவர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டார். மேலும், அவ்வழியாக செல்லும் வாகனங்களை வழிமறித்து 'நான் ராஜாதி ராஜன்டா முடிஞ்சா அடிச்சு பாருடா' என்று வசனம் பேசியதுடன், கெட்ட வார்த்தைகளால் வாகன ஓட்டிகளை வசை பாடி தீர்த்துள்ளார். 

இதையும் படிக்க: அதிமுகவை சிதைக்கும் சக்தியாக உருவெடுத்துள்ள பாஜக: 2014 முதல் 2022 வரை ஒரு பார்வை

தொடர்ந்து அவ்வழியாக வந்த அரசு விரைவு பேருந்து ஒன்றை வழிமறித்த அந்த முதியவர், "என்னை ஏத்திட்டு ஒரு எட்டு போய்ருவிய்யா நீ"...? எங்க என்ன ஏத்தி பாரு என கூறி அழிச்சாட்டியத்தில் ஈடுபட்டுள்ளார்.

போதையில் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக சடுகுடு விளையாடிக்கொண்டிருந்த அவரால் காண்டான பொதுமக்கள், முதியவரை அழைத்து சென்று சாலையின் ஓரம் அமரவைத்தனர். இந்நிலையில் முதியவர் சலசலப்பில் ஈடுபட்ட இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.