அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு...போராட்டத்தை வாபஸ் பெற்ற அங்கன்வாடி பணியாளர்கள்!

அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு...போராட்டத்தை வாபஸ் பெற்ற  அங்கன்வாடி பணியாளர்கள்!

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெற்றதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். 

வேலை பளுவை குறைக்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இதையும் படிக்க : களத்தில் தாக்குப் பிடிப்பாரா பி.டி.ஆர்...!

இந்நிலையில், தூத்துக்குடியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், அங்கன்வாடி பணியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து, விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். 

அத்துடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், அங்கன்வாடி பணியாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார்.