சீட்டைக் காண்பித்து சீட்டிங் செய்த அண்ணாமலை...!!

சீட்டைக் காண்பித்து சீட்டிங் செய்த அண்ணாமலை...!!

திமுகவின் சொத்து என்று அண்ணாமலை கூறியது தொடர்பான ஆவணங்களை 15 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாராதி கெடு விதித்துள்ளார். 

தி.மு.க.வின் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக அறிவித்து வந்த தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று, தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்டார்.  இது தொடர்பாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, அவர், அண்ணாமலை, ஒரு ஊழல் குற்றச்சாட்டுகளை கூட சொல்லவில்லை என்று கூறினார்.  அத்துடன், திமுகவின் சொத்து என்று அண்ணாமலை வெளியிட்ட சொத்து பத்திர ஆவணங்களை 15 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்று காலக் கெடு விதித்த ஆர். எஸ். பாரதி, வெளியிடத் தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

ஆருத்ரா மோசடியில் தனக்கு பங்கிருப்பதை திசைத் திருப்பவே, அண்ணாமலை இந்த பட்டியலை வெளிட்டுள்ளார் என்று கூறிய ஆர்.எஸ். பாரதி, ஆருத்ரா நிர்வாகியிடம் பல கோடி ரூபாயை அண்ணாமலை,  நேரடியாக பெற்றிருக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.  மேலும் ரஃபேல் வாட்ச் தொடர்பாக அண்ணாமலை வாட்சுக்கான பில்லை வெளியிடாமல் சீட்டைக் காண்பித்து சீட்டிங் செய்துள்ளார் என்றும் ஆர். எஸ். பாரதி விமர்சித்துள்ளார்.  

இதையும் படிக்க:  அனைத்துக்கும் ஒரே அட்டை... அது என்ன சிங்கார சென்னை அட்டை..!!