"சனாதன சக்திகளுக்கு பணிவிடை செய்யும் அண்ணாமலை.! " - விசிக தலைவர் திருமாவளவன்

"சனாதன சக்திகளுக்கு பணிவிடை செய்யும் அண்ணாமலை.! " - விசிக தலைவர் திருமாவளவன்

அண்ணாமலை போன்றவர்கள் சனாதன சக்திகளுக்கு பணிவிடை செய்யும் சேவைகாரர்களாக இருப்பது தான் அவர்களின் பிழைப்புவாதம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகரில், தியாகி இமானுவேல் சேகரன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இம்மானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

அத்துடன், சனாதனத்தின் உண்மையான பொருளை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர் என்றும், ஆளுநர் ரவி "ஜமுக்காளத்தால் வடிக்கப் பெற்ற சனாதனி" என்றும் விமர்சித்தார். 

இதையும்  படிக்க  | "ராகுல் காந்தி ஏன் சனாதனம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை?" சீமான் கேள்வி!!