தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு: மக்கள் பொறுப்புடன் பண்டிகையை கொண்டாட அரசு வேண்டுகோள்...

தமிழகத்தில் தீபாவளி அன்று  காலையில் 1 மணி நேரமும் மாலையில் 1 மணி நேரமும் மட்டுமே   பட்டாசு வெடிக்க  அரசு அனுமதி அளி்த்திருக்கிறது.   

தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு: மக்கள் பொறுப்புடன் பண்டிகையை கொண்டாட  அரசு வேண்டுகோள்...

தமிழகத்தில் தீபாவளியன்று  பட்டாசு வெடிப்பதற்கான  நேரக்கட்டுப்பாட்டை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக சுற்றுச்சூழல் துறை  வெளியிட்டுள்ள அறிவிப்பில், நவம்பர் 4 ஆம் தேதியான  தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணிவரை பசுமை பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுவதாக கூறப்படுள்ளது 

ஒலி மாசை ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், நீதிமன்றங்கள், மத வழிபாட்டுத்தளங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவர்க்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ள தமிழக அரசு, தீப்பிடிக்கக்கூடிய பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் காற்று மாசை ஏற்படுத்தாத வகையில் மக்கள் பொறுப்புடன் பண்டிகையை கொண்டாட வேண்டும்’ என அரசு  வேண்டுகோள் விடுத்துள்ளது..