சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மற்றொரு சிறுவன்! இரண்டாவது முறையாக போக்சோவில் கைதால் பரபரப்பு!

பல்லடத்தில் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மற்றொரு சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மற்றொரு சிறுவன்!  இரண்டாவது முறையாக போக்சோவில் கைதால் பரபரப்பு!

பல்லடத்தில் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மற்றொரு சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தெற்கு பாளையம் பிரிவு இந்திரா நகரில் லாரி டிரைவர் ஒருவரது மகன் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவன் நேற்று மாலை தனது வீட்டின் முன்பு உள்ள தெருவில் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது சற்று நேரத்தில் அந்த சிறுவன் மாயமானதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து அச்சிறுவனை காணாமல் அவனது குடும்பத்தினர் அங்கும் இங்கும் தேடி அலைந்த நிலையில், அங்குள்ள ஒரு வீட்டிலிருந்து அச்சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு விரைந்து சென்று பார்த்த போது அந்த 11 வயது சிறுவன் அழுது கொண்டே வெளியே வந்துள்ளான். அப்போது சிறுவனிடம் விசாரித்த போது அதே பகுதியைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் 17 வயதுடைய மாதேஸ்வரன் என்பவன் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறியுள்ளான். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தொடர்ந்து ஆய்வாளர் நிர்மலா தேவி மாதேஸ்வரனைப் பிடித்து நடத்திய விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோன்று பாலியல் தொந்தரவு புகாரில் மாதேஸ்வரன் போலீசாரால் கைதுசெய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கோவை சிறார் சீர் திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான். இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாகவும் பள்ளி படிப்பை தொடர விருப்பம் தெரிவித்ததன் காரணமாகவும் பிணையில் வெளியே வந்த மாதேஸ்வரன், மீண்டும் பாலியல் தொந்தரவு வழக்கில் போலீசாரால் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் சிறையில் அடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.