"நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது" வைகோ பேட்டி!

"நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது" வைகோ பேட்டி!

"நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது" என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில், மதிமுக பாெதுச்செயலாளர் வைகோ சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வைகோ நேரில் சந்தித்து கையெழுத்து இயக்கம் வெற்றி பெற வாழ்த்து பெற்றார்.  

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஆளுநரை திரும்ப பெறக்கோரி நேற்று துவங்கிய கையெழுத்து இயக்கம் அடுத்த மாதம் 20 ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவித்தார். மீண்டும் மத்தியில்  மோடி அரசு வராத அளவுக்கு ஒரு சூழல் உருவாகி உள்ளதாகவும், இந்தியா முழுவதும் மோடி எதிர்ப்பு அலை உருவாகி உள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து, தமிழகம் புதுவை உள்ளிட்ட 40 நாடளுமன்ற தொகுதிகளில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்று தெரிவித்த அவர் மத்திய அமைச்சர்கள் எத்தனை முறை தமிழகத்திற்கு படை எடுத்தாலும் தமிழகத்தில் அரசியல் ரீதியாக வெற்றி பெற முடியாது எனக் கூறினார்.

மேலும், ஆளுநர் தமிழகத்திற்கு ஒரு கேடு என்றும் அவர் மீது உள்ள எதிர்ப்பை காட்டுவதற்கு தமிழ்நாட்டு மக்களிடம் ஒரு கோடி கையெழுத்து பெற்று குடியரசு தலைவரிடம் வழங்க உள்ளதாகவும்  கூறினார்.

இதையும் படிக்க:யோகா செய்து அசத்திய நாய்; இணையத்தில் வைரல்!