காசோலை மோசடி இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு 6 மாத சிறை தண்டனை எதிர்த்து மேல்முறையீடு

காசோலை மோசடி இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு 6 மாத சிறை தண்டனை எதிர்த்து மேல்முறையீடு

காசோலை மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது

2014ல் நடிகர் கார்த்தி, சம்ந்தா நடிப்பில் "எண்ணி ஏழு நாள்" படத்தை தயாரிப்பதற்காக, நான் ஈ, இரண்டாம் உலகம் படங்களை தயாரித்த பி.வி.பி. கேப்பிடல் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக பங்குதாரர் என்கிற முறையில் இயக்குனர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர்கடனாக பெற்றுள்ளார்.

மேலும் படிக்க | அனைத்து மதத்தினரும் பயன்படும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை

கடனுக்காக லிங்குசாமி கொடுத்த ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய்க்கான காசோலை வங்கியில் பணமில்லாமல் திரும்பியதால், பிவிபி நிறுவனம் தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து 2022 ஆகஸ்ட் 22ம் தேதி தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை விசாரித்த  மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சிறை தண்டனையை உறுதி செய்தது. 

மேலும் படிக்க | 2 வருடமாக குடிநீர் இல்லை .....! கண்டுகொள்ளாத ஊராட்சி மன்ற தலைவர் - பட்டை நாமம் போட்டு மக்கள் ஆர்பாட்டம்..

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தடை விதிக்க கோரியும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், அதன் நிர்வாகிகளான இயக்குனர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.