பறவை ஆணையத்திற்கு தலைவா், உறுப்பினா்கள் நியமனம்!

பறவை ஆணையத்திற்கு தலைவா், உறுப்பினா்கள் நியமனம்!

மாநில பறவை ஆணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், என மொத்தம் 8 பேர் கொண்ட குழுவை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டிலேயே பறவை இனங்களை பாதுகாப்பதில் தமிழக அரசு முன்னோடியாக உள்ளது. மாநிலத்தில் 17 பறவைகள் சரணாலயங்களில், 14 ராம்சார் தளங்களாகும். பறவைகளுக்கு, பாதுகாப்பு முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், பறவைகளை பாதுகாப்பதற்காக மாநில பறவை ஆணையத்தை அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.

வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைவராகவும், வருவாய்துறை செயலாளர் அல்லது ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் அல்லது ஆணையர், சுற்றுலாத்துறை இயக்குனர் உள்ளிட்ட 8 பேர் உறுப்பினர்களாகவும், முதன்மை வன தலைமை பாதுகாவலர் உறுப்பினர் செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரியப்படுகிறது.

இந்த குழு, அனைத்துப் பறவைகளுக்கும், ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தைத் தயாரிக்கவும், பறவைகள் கூடு கட்டுவதற்கான நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் சரணாலயங்கள் மற்றும்
மற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க || திருவள்ளூர் மாவட்டத்தில், விரைவில் மெகா பட்டு பூங்கா!!