குழந்தையுடன் இளம் பெண் தீக்குளிக்க முயற்சி... மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பரபரப்பு

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையுடன் இளம் பெண் தீக்குளிக்க முயற்சி... மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பரபரப்பு

கடத்தூர் அடுத்த நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் இவரது மனைவி சத்யா வயது 24 இவர்களது இருவருக்கும் திருமணம் ஆகி நான்கு வருடம் முடிந்த நிலையில் மூன்று வயதில் ஒரு  குழந்தை உள்ளது. சத்யாவின் மாமியார் முனியம்மாள் சத்யாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியுள்ளார்.

கேட்கும் வரதட்சனை கொடுக்காவிட்டால் தன்னுடைய மகனுக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைப்பதாக மிரட்டியுள்ளார். இது சம்பந்தமாக கடத்தூர் ,அரூர் காவல் நிலையங்களிலும் மற்றும் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை .

இதனையடுத்து தற்பொழுது யார் ஆதரவும் இல்லாமல் தன்னுடைய தாய் வீட்டில்    குழந்தையை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நடவடிக்கை எடுக்காத காவல்துறை மை கண்டித்தும், வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தும் மாமியார் மாமனார், கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சத்யா இன்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குழந்தையுடன் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் சத்யாவை மீட்டு தீக்குளிக்கும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.