5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருது!!

காந்திஜெயந்தியை முன்னிட்டு, 5 காவலர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாராட்டத்தக்க வகையில் சிறப்பாக பணியாற்றிய 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள்‌ காவல்‌ விருது வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் கோ. சசாங்சாய், விழுப்புரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பா. காசிவிஸ்வநாதன், உள்ளிட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

இவ்விருது, முதலமைச்சரால் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி, குடியரசு தினத்தன்று வழங்கப்படும் எனவும், இவ்விருதுடன், பரிசுத்தொகையாக 40 ஆயிரம் ரூபாய்  ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.