காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் யாத்திரை... ரவீந்தர் ரெட்டி சொன்னது என்ன?

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் யாத்திரை... ரவீந்தர் ரெட்டி சொன்னது என்ன?

உடல் வலிமையை பேணிக் காக்க வேண்டும், அனைவரும் விளையாட்டு துறையில் பங்கேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி  விழிப்புணர்வு சைக்கிள் பாரத யாத்திரையை மத்திய அரசு ஊழியர் மேற்கொண்டுள்ளார்.

விழிப்புணர்வு சைக்கிள் யாத்திரை:

தெலுங்கானா ஹைதராபாத்தை சேர்ந்த மத்திய அரசு ஊழியர் ரவீந்தர் ரெட்டி, மத்திய அரசின் கெயில் நிறுவனத்தில் கெமிக்கல் அனலிஸ்ட் பிரிவில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் உடல் வலிமையை பேண வேண்டும் எனவும், மன அழுத்தத்தை போக்க தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும், விளையாட்டுத் துறையில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வை ஏற்படுத்த சைக்கிள் பாரத யாத்திரையை மேற்கொண்டுள்ளார்.

தமிழகம் வந்தடைந்த ரவீந்தர்:

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 3700 கிலோமீட்டர் தூர பயணத்தை இலக்குடன் கொண்டு, கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதி ஸ்ரீ நகரில் இருந்து தொடங்கிய இந்த சைக்கிள் பாரத யாத்திரையானது, ஹரியானா, பஞ்சாப், டெல்லி, உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்ட்டிரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா வழியாக தமிழகத்துக்கு வந்த ரவீந்தர் ரெட்டி இன்று கோவில்பட்டிக்கு வந்தடைந்தார். கோவில்பட்டிக்கு வந்த அவருக்கு கோவில்பட்டி சரவணபவன் உரிமையாளர் சீனிராஜ் வரவேற்பு அளித்து பாராட்டு தெரிவித்தார். 

இதையும் படிக்க: சிவகங்கை: 5 வயது மகளை துண்டால் இறுக்கி கொன்ற தாய், சேலையில் தூக்கிட்டு தற்கொலை...! காரணம் என்ன?

இன்றுடன் நிறைவடையும் சைக்கிள் யாத்திரை:

இதைத்தொடர்ந்து, கோவில்பட்டியில் இருந்து கிளம்பிய ரவீந்தர் நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு சென்று தனது விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை நிறைவு செய்யவுள்ளார். சுமார் 3700 கிலோமீட்டர் தூர பயணத்தை 22 நாட்களில் ரவீந்தர் ரெட்டி நிறைவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் ரவீந்தர்:

இந்நிலையில் தமிழகம் வந்தடைந்த ரவீந்தர் ரெட்டி தனது விழிப்புணர்வு சைக்கிள் பயணம் குறித்து பேசினார். தற்பொழுது தான் விடுமுறையில் இருப்பதாகவும், தன்னுடைய ஒவ்வொரு விடுமுறை காலத்தையும் பயனுள்ளதாக்கும் வகையில் பல்வேறு இடங்களுக்கு சைக்கிள் மூலமாக விழிப்புணர்வு யாத்திரையை மேற்கொண்டுவருவதாக கூறினார். தொடர்ந்து, தற்போது அனைவரும் உடல் வலிமையை பேண வேண்டும் என்பதற்காகவும், மன அழுத்தம் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காக தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும், அனைவரும் விளையாட்டு துறையில் பங்கேற்க வேண்டும் என்பதையெல்லாம் வலியுறுத்தி தான், தற்போது 3700 கிலோமீட்டர் தூர சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.