கண் தானம் குறித்த விழிப்புணர்வு...! 20 மீட்டர் நீளத்தில் கண் ஓவியம் வரைந்து மாணவிகள் அசத்தல்...!

சேலத்தில் கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 20 மீட்டர் நீளத்தில் கண் ஓவியம் வரைந்து கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு....

கண் தானம் குறித்த விழிப்புணர்வு...! 20 மீட்டர் நீளத்தில் கண் ஓவியம் வரைந்து மாணவிகள் அசத்தல்...!

சேலத்தில் கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 20 மீட்டர் நீளத்தில் கண் ஓவியம் வரைந்து கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  

கண் தானம் :

கண் தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை தேசிய கண் தான விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 சேலம் மாநகராட்சி :

அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகராட்சி அலுவலகம் எதிரே கண் தானம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தனியார் கல்லூரி மாணவிகள் 12 பேர், 12 மணி நேரத்தில், 20 மீட்டர் அகலம் உள்ள கண் ஓவியத்தை வரைந்து, பார்வையற்றோருக்கு கண் தானம் செய்வீர் ; ஒளி கொடுப்பீர் என்ற வாசகங்களையும் வரைந்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த கண் தான வரைபட விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுடன் இணைந்து கண் தானம் குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். மாணவிகளின் இந்த விழிப்புணர்வு வரைபடத்தை ஏராளமான பொதுமக்கள் பார்த்து செல்பி எடுத்துச் சென்றனர்.