செய்தித்தாள் முகவரை திருப்புளியால் குத்திய பாஜக பிரமுகர்…  

வத்தலக்குண்டு அருகே மாத சந்தா வசூலிக்க சென்ற  செய்தித்தாள் முகவரை திருப்புளியால் குத்திய பாஜக பிரமுகர் தப்பி ஓடினார்.

செய்தித்தாள் முகவரை திருப்புளியால் குத்திய பாஜக பிரமுகர்…   

வத்தலக்குண்டு அருகே மாத சந்தா வசூலிக்க சென்ற  செய்தித்தாள் முகவரை திருப்புளியால் குத்திய பாஜக பிரமுகர் தப்பி ஓடினார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விருவீடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல முன்னணி செய்தித்தாள்களின்  ஏஜெண்டாக இருந்து வருபவர் பன்னீர்செல்வம். இதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் கண்ணன் பாஜக பிரமுகர். இவரிடம் நாள்தோறும் வழங்கிய  செய்தித்தாளுக்கு  ஒரு வருடமாக பாக்கி வைத்துள்ள மாதச்சந்தா பணத்தை வாங்குவதற்கு பன்னீர் செல்வம் சென்றபோது கண்ணன் தர மறுத்து இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. இதில்  கண்ணன் திருப்புலியால் சற்றும் எதிர்பாராத நேரத்தில் பன்னீர் செல்வத்தை தலை, கை, கால் உள்ளிட்ட நான்கு இடங்களில் குத்தி விட்டு தப்பி விட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் ரத்தம் கொட்டிய நிலையில் மயங்கி விழுந்த பன்னீர் செல்வத்தை திண்டுக்கல் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவல்துறையில் புகாரின்பேரில் தப்பியோடிய பெட்டிக்கடை நடத்தி வரும் பாஜ.க பிரமுகர் கண்ணனை போலீஸ் தேடி வருகின்றனர். நாளிதழ் முகவர் பன்னீர்செல்வம் பிஜேபி பிரமுகரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பத்திரிகை முகவர்கள் மற்றும் செய்தியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்