ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்கிறது பாஜக மேலிடக்குழு!

ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்கிறது பாஜக மேலிடக்குழு!

சென்னையில், முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக ஆளுநர் ஆர்.என். ரவியை பாஜக மேலிடக்குழு இன்று சந்திக்கவுள்ளது. 

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பாஜகவினருக்கு எதிராகவும், பாஜக நிர்வாகிகளை குறிவைத்தும் வழக்குகள் போடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

அதைத்தொடர்ந்து, சென்னை பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே, அக்கட்சியின் கொடிக்கம்பம் நடப்பட்ட விவகாரத்தில் 115 பேர் கைது செய்யப்பட்டனர். 

இதையடுத்து தமிழ்நாடு அரசால் பாஜகவினர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு ஒன்றை அக்கட்சியின் தலைவர் ஜே. பி. நட்டா நியமனம் செய்தார். 

இந்நிலையில், இந்த குழுவினர், இன்று ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.