கடலூரில் பாமக பொதுக்கூட்டம் நடத்த தடை...!

கடலூரில் பாமக பொதுக்கூட்டம் நடத்த தடை...!

பாமக 35 -வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தை கடலூர் மாவட்டத்தில் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் வடலூர் பேருந்து நிலையம் அருகே பாமகவின் 35-வது ஆண்டு விழா பொது கூட்டம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட கோரி அக்கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாமக பொதுக் கூட்டம் நடத்திக் கொள்ளலாம் என கூறி வழக்கை முடித்து வைத்து  உத்தரவிட்டார்.

இதையும் படிக்க   |  ” ஜம்மு காஷ்மீர் விரைவில் மாநிலம் ஆகும்” - மத்திய அரசு.