அமராவதி ஆற்றின் குறுக்கே ரூ 21.58 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை...!

அமராவதி ஆற்றின் குறுக்கே ரூ 21.58 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை...!

திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் அருகே அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை அமைச்சர் சாமிநாதன் மற்றும்  அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனா்.  

தடுப்பணை தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், மாம்பாடி ஊராட்சி மற்றும் கொளத்துப்பாளையம் பேரூராட்சி கவுண்டையன்வலசு ஆகிய பகுதிகளில் நீர்வளத்துறையின் சார்பில் ரூபாய் 21 கோடியே 58  லட்சம் மதிப்பீட்டில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க : அதிமுகவில் இணையும் பாஜக நிர்வாகிகள்... பாஜக - அதிமுக கூட்டணி உடைகிறதா...?

இந்நிலையில் இதற்கான பூமிபூஜை நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பணியை தொடங்கிவைத்தனர்.  இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.