கர்நாடகத்தை அசைத்து பார்த்த பாரத் ஜோடோ யாத்திரை...!!

கர்நாடகத்தை அசைத்து பார்த்த பாரத் ஜோடோ யாத்திரை...!!

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி பெற்ற மாபெரும் வெற்றியை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், மேளத்தாளத்துடன் கொண்டாடினார்கள்.

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் இம்மாதம் 10ம் தேதி நடைபெற்றது.  இத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியானது தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.  இந்த வெற்றியை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினர் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில துணைத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி,

கே எஸ் அழகிரி தலைமையில் நாங்கள் கர்நாடகத்தில் பிரச்சாரம் சென்ற போது, பாஜக குறித்து 40% கமிஷன் ஆட்சி என்று பேச்சு பொருளாக இருந்தது என்றும்  இந்துக்கள் என்று சொல்லி அறநிலையத்துறையில் நிதி ஒதுக்க கூட 40% ஊழல் செய்துள்ளனர் என்றும் மிக பெரிய ஊழல் ஆட்சி நடந்தது எனவும்  அவர்கள் கொடுத்த ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை எனவும் கூறி வாக்கு சேகரித்ததாக கூறினார்.

மேலும், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது எனவும் இதை போல் மத்தியிலும் பாஜக ஆட்சி முடிவுக்கு வர போகிறது எனவும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரை கர்நாடகத்தை அசைத்து பார்த்துள்ளது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:    முதலமைச்சர் இன்று மாலை பங்கேற்கும் நிகழ்வுகள்...!!