பைக்-டிப்பர் லாரி மோதி விபத்து - இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி  

பைக்-டிப்பர் லாரி மோதி விபத்து - இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி   

போடி அருகே சடையால் பட்டியில் இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த வாலிபர் தலை நசுங்கி சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள  மாணிக்காபுரத்தை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரின் மகன் அஜ்மல்கான் வயது 27 இவரும் உப்புக்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீதர் வயது 20 என்பவரும் தேனியில் இருந்து உப்புக்கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக பயணித்துள்ளனர். அப்பொழுது சடையால் பட்டி பேருந்து நிறுத்தம் அருகே எதிரே ஜல்லிக்கல் ஏற்றி வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோதி அஜ்மல் கான்  சம்பவ இடத்தில் தலை சிதறி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து  உயிரிழந்தார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஸ்ரீதரை  பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விபத்தினை அறிந்த அஜ்மல் கான் பெற்றோர் மற்றும் உறவினர்கள் டிப்பர் லாரி ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி  உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.  வீரபாண்டி காவல்துறையினர் அஜ்மல் கான் குடும்பத்தாரிடம் சமாதானம் பேசி   உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருசக்கர வாகன விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுனர் மற்றும் நடத்துனர் வாகனத்தை சிறிது தூரம் தள்ளி சென்று நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.