சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை... புறநகர் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை...

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை... புறநகர் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை...

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும் சென்னையை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் நேற்று  பிற்பகல் முதலே வானம் கருமேகம் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், மாலையில் திருவல்லிக்கேணி, வடபழனி, ஈக்காட்டு தாங்கல், கிண்டி, தியாகராய நகர், எழும்பூர், ஆயிரம் விளக்கு தண்டையார்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் மற்றும் சென்னையை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.மேலும் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.