சங்கராபுரம் பட்டாசுக்கடை தீ விபத்தில் மேலும் ஒரு சிறுவன் பலி... உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு...

சங்கராபுரம் பட்டாசுக்கடை தீ விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவன் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

சங்கராபுரம் பட்டாசுக்கடை தீ விபத்தில் மேலும் ஒரு சிறுவன் பலி... உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு...

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கடந்த 26-ம் தேதி பட்டாசு கடையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 11 வயது சிறுவன் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர், வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாணாபுரம் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் சஞ்சய், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

சிறுவனின் தந்தை பாலு கடந்த 4 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தாயார் கன்னியம்மாள் தீபாவளி பண்டிகைக்கு சட்டை வாங்கி தருவதற்காக, சங்கராபுரத்திற்கு சஞ்சையை அழைத்து சென்றுள்ளார். அப்போது நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் சிக்கிய சிறுவன், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். இதனிடையே, விபத்து நிகழ்ந்த இடத்தில் கடை நடத்தி வந்த செல்வகணபதியின் பட்டாசு கடை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.