லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்ட விரோத செயல்களை அனுமதிக்கக் கூடாது... காவலர்களுக்கு சேலம் மாவட்ட எஸ்.பி. கடும் எச்சரிக்கை...

சேலம் மாவட்டத்திற்குட்பட்ட காவல்நிலையங்களில் பணிபுரியும் போலீசார், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு துணைபோனால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் எச்சரித்துள்ளார். 

லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்ட விரோத செயல்களை அனுமதிக்கக் கூடாது... காவலர்களுக்கு சேலம் மாவட்ட எஸ்.பி. கடும் எச்சரிக்கை...

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅ பிநவ் சுற்றறிக்கை ஒன்றை அனுப் பியுள்ளார். அதில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பணியாற்றும் எழுத்தர் உட்பட காவல் ஆய்வாளர் வரையில் எந்த எந்த சட்ட விரோத செயல்களுக்கு எவ்வளவு பணம் பெறுகிறார்கள், என்பது குறித்த பட்டியலை அவர் இணைத்துள்ளார்.

அதிலும் குறிப்பாக, சட்டவிரோத மதுபான விற்பனை, சூதாட்டம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு தலைமை காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், காவல் ஆய்வாளர்கள் என ஒவ்வொருவரும்  நடத்தும் வசூல் வேட்டையை பட்டியலிட்டு காட்டியுள்ள எஸ். பி., இதுபோன்ற பணம் வசூல் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைவிடுத்துள்ளார்.