சமயபுரம் கோவிலில் பக்தர்களிடம் பணம் வாங்கி கொண்டு விரைவு தரிசனம் செய்யும் புரோக்கர்கள்…  

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களிடம் பணம் வாங்கி கொண்டு விரைவாக சாமி தரிசனம் செய்ய புரோக்கர்கள் வழிவகை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமயபுரம் கோவிலில் பக்தர்களிடம் பணம் வாங்கி கொண்டு விரைவு தரிசனம் செய்யும் புரோக்கர்கள்…   

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களிடம் பணம் வாங்கி கொண்டு விரைவாக சாமி தரிசனம் செய்ய புரோக்கர்கள் வழிவகை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் உள்ளூர் புரோக்கர்கள் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களிடம் பணம் வாங்கி கொண்டு சாமி தரிசனம் செய்ய விரைவாக அழைத்து செல்கின்றனர். மேலும் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் அவர்களை தடுத்தலும் அதனை மீறி கோவிலுக்குள் அழைத்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.