பாம்பன் பாலத்தில் பற்றி எரிந்த மின்சார வயர்கள்! போட்டோஸ் வைரல்!!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலத்தில் உள்ள மின்சார வயர்கள் திடீரென்று இன்று இரவு தீப்பற்றி எரிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பாம்பன் பாலத்தில் பற்றி எரிந்த மின்சார வயர்கள்!  போட்டோஸ் வைரல்!!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலத்தில் உள்ள மின்சார வயர்கள் திடீரென்று இன்று இரவு தீப்பற்றி எரிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மண்டபத்திலிருந்து பாம்பன் பாலம் வழியாக ராமேஸ்வரத்திற்கு மின்சார வயர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் பாம்பன் பாலத்தில் மின்சார வயர்கள் திடீரென்று பற்றி எரிந்தன. பாலத்தில் அதி வேகமாக காற்று வீசிய காரணத்தால் தீ மளமளவென எரிய தொடங்கியது.

சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் பாம்பன் சாலைப் பாலத்தில் செல்லக்கூடிய மின் இணைப்புகளை துண்டித்து அதன் பின் தண்ணீர் ஊற்றி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மின்வாரிய ஊழியர்களின் உதவியோடு முழுமையாக தீயை  அணைத்தனர்