அந்திரத்தில் பறந்து வந்த டையர்.. அடுத்து நடந்து என்ன?.. பரபரப்பு சிசிடிவி காட்சி!!

தேனியில் வேகமாக வந்த காரின் மேல் பகுதியில் இருந்த டயர் பறந்து வந்து விழுந்ததில் 3 பேர் காயம் அடைந்தன்ர்.

அந்திரத்தில் பறந்து வந்த டையர்.. அடுத்து நடந்து என்ன?.. பரபரப்பு சிசிடிவி காட்சி!!

தேனி மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அருகே நேற்று இரவு ஒரு பகீர் சம்பவம் நடந்துள்ளது.

விபத்து என்பது தினந்தோறும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ரோட்டில் ஓரமாக நடந்து செல்பவர்கள் மீது வாகனம் மோதி விபத்து.. கார்கள் மோதி விபத்து என பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், தற்போது ஒரு வித்தியாசமான முறையில் விபத்து நடந்துள்ளது.

தேனியில் நேற்று தேனீர் கடையில் தேனீர் அருந்தி கொண்டு சில நபர்கள் நின்றுள்ளனர். அப்போது திடீரென எங்கிருந்தோ ஒரு கார் டயர் பறந்து வந்து அங்கிருந்தவர்கள் மீது விழுந்தது. இதில் மூன்று பேர் காயமடைந்தனர். அந்த டயர் (ஸ்டெப்னி)  மதுரை நோக்கி வேகமாக சென்ற டவேரா காரின் மேல் பகுதியில் இருந்து பறந்து விழுந்தது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கானாவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.