தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

கேரள கடலோர பகுதிகள் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தென் தமிழகம், திருப்பூர் கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வருகிற 24-ம் தேதி வரை தென் தமிழகம், வட தமிழகம், திருப்பூர் கோவை, நீலகிரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், காலை வேளையில் லேசான பனி மூட்டம் நிலவும் எனவும், மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவுமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.