10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு ...

தமிழகத்தில் ஈரோடு, நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு ...

தென்கிழக்கு அரபிக்கடலில் இருந்து வட கேரளம், தெற்கு கா்நாடகம் மற்றும் வட தமிழகம் வழியாக தென்மேற்கு வங்கக்கடல் வரை காற்றின் திசை மாறும் பகுதி நிலவுகிறது என்றும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், திருப்பூா், சேலம், தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது. சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.