டிஎன்பிஎஸ்சி தேர்வு நேரத்தில் மாற்றம்....

டிஎன்பிஎஸ்சி தேர்வு நேரத்தில் மாற்றம்....

ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு குரூப் 2, 2A முதன்மை எழுத்து தேர்வு இன்று காலை மற்றும் பிற்பகல் என சென்னையில் 20 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது.

வருகை பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவு எண்களின் வரிசையிலும், வினா தாள்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக காலை வினாத்தாள்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.  தற்போது அந்த நிலை சரி செய்யப்பட்டு தேர்வு அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த காலதாமத்தை ஈடு செய்யும் வகையில் மதியத் தேர்வு 02:30 மணிக்கு தொடங்கி 05:30 மணி வரை நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார்.  இதற்கு முன்னர் தேர்வு நேரம் மதியம் 02.00 மணிமுதல் மாலை 05. 00 மணி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   உதகையில் உலாவரும் சிறுத்தைகள்... வனத்துறையிடம் மக்கள் கோரிக்கை!!!