செங்கல்பட்டு: பள்ளி மாணவி 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி!!

செங்கல்பட்டு அருகே 9-ம் வகுப்பு மாணவி பள்ளியின் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு: பள்ளி மாணவி 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி!!

மாமல்லபுரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரது மகள் கஜசுபமித்ரா, பூஞ்சேரி அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மாணவி தற்கொலை முயற்சி:

மாணவி பள்ளியின் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மாணவியை மீட்டு ஆசிரியர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, தமிழ் இரண்டாம் பருவநிலை தேர்வின் போது, மாணவி பிட் பேப்பரை வைத்து தேர்வு எழுதியதாகவும், இதைப்பார்த்த ஆசிரியை பெற்றோரிடம் கூறியிடுவேன் என கூறியுள்ளார்.

இதனால், மனமுடைந்த மாணவி பள்ளியின் 2- வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.