சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்... போட்டிகள் வைத்து கொரோனா விழிப்புணர்வு... 

பொதுமக்களுக்கு கொரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்த உள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்... போட்டிகள் வைத்து கொரோனா விழிப்புணர்வு... 

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பரவாமல் தடுக்க மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் இன்று மற்றும் நாளை கொரோனா விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு போட்டிகள் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு இணையவழியில் நடத்தப்பட உள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த மூன்று படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பாராட்டு சான்றிதழ்கள் வரும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்கள் மற்றும் வழிமுறைகளை மாநகராட்சியின் இணையதளத்தில் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.