இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை பெய்து முடிந்ததை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

தற்போது கடந்த சில தினங்களாகவே கனமழை கொட்டி வருகிறது. இதற்கிடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. அதன்பிறகும் அடங்காத மழை இரவிலும் நீடித்தது. இதனால், கன்னியாகுமரி வெள்ளத்தில் மிதக்கிறது. 

தற்போது கன்னியாகுமரியில்  விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கன்னியாகுமரிக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரியில் இன்று ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யும் என்றும்,  நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.