மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களின் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக பெய்துவருகிறது. அனைத்து பகுதிகளிலும் பருவமழை இயல்பைவிட அதிகமாகவே பதிவாகி இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் மழை பெய்துவருகிறது.  அந்த வகையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் மேலும் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி இன்று கடலோர மாவட்டங்களில், மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை  தென்தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.