மூன்றாக பிரிக்கப்படும் சென்னை காவல் ஆணையரகம்? விரைவில் அறிவிப்பு

சென்னை காவல் ஆணையரகத்தை மூன்றாகப் பிரிப்பது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் மற்றும் தாம்பரம், ஆவடி சிறப்பு அதிகாரிகள் இன்று முறையான பரிந்துரைகள் அளிக்கும்படி டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 

மூன்றாக பிரிக்கப்படும் சென்னை காவல் ஆணையரகம்? விரைவில் அறிவிப்பு

சென்னை காவல் ஆணையரகத்தை மூன்றாகப் பிரிப்பது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் மற்றும் தாம்பரம், ஆவடி சிறப்பு அதிகாரிகள் இன்று முறையான பரிந்துரைகள் அளிக்கும்படி டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 

சென்னை காவல் ஆணையரகத்தை பிரிப்பது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஆவடி ஆணையரக சிறப்பு அதிகாரி சந்தீப் ராய் ரத்தோர், தாம்பரம் ஆணையரக சிறப்பு அதிகாரி ரவி ஆகியோருடன் நாளை டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆலோசனை நடத்த உள்ளார். இந்நிலையில் தாம்பரம் மற்றும் ஆவடி ஆணையரகம் அமைப்பதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகளுக்கு அலுவலகம் அமைப்பதற்கு, முறையே பரங்கிமலை இணை ஆணையர் அலுவலகத்திலும், அம்பத்தூர் இணை ஆணையர் அலுவலகத்திலும் வசதிகள் செய்து கொடுக்கும்படி, சென்னை காவல் ஆணையருக்கு டி.ஜி.பி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல இரண்டு சிறப்பு அதிகாரிகளுக்கும் அமைச்சுப் பணியாளர்கள், ஒவ்வொரு சிறப்பு அதிகாரிக்கும் ஒரு நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர், நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 10 காவலர்கள் அளிக்கும்படி சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இரண்டு சிறப்பு அதிகாரிகளுக்கும் வாகன வசதி செய்து கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை காவல் ஆணையரகத்தை பிரிப்பது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் மற்றும் தாம்பரம், ஆவடி சிறப்பு அதிகாரிகள் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தின்போது முறையான பரிந்துரைகள் அளிக்கும்படி டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.