மக்களை முட்டாளாக்க நினைக்கிறது... மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு...

மத்தியில் உள்ள பாஜக அரசு மக்களை முட்டாளாக்க நினைக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களை முட்டாளாக்க நினைக்கிறது... மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு...

தடுப்பூசி பற்றாக்குறை பிரச்சனையில் மக்களை முட்டாளாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மத்திய அரசின் புதிய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவியாவும் முந்தைய அமைச்சரை போலவே செயல்படுவது வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.

மேலும், தடுப்பூசி பற்றாக்குறை என ஒவ்வொரு மாநிலமும் கூறிக்கொண்டே இருந்தும்,  தடுப்பூசி இல்லை என்று தடுப்பூசி மையங்களில் பலகைகள் போடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் வரிசையில் நிற்கும் மக்கள் தடுப்பூசி இல்லாமல் வீட்டிற்கு திரும்பி செல்கின்றனர். இதனை மத்திய அரசு கவனிக்கவில்லையா எனவும் சாடியுள்ளார். மேலும், தடுப்பூசி பற்றாக்குறையென நாளிதழ்களும், செய்தி ஊடகங்களும் செய்தி வெளியிடுவது பொய்யா? என கேள்வி எழுப்பியுள்ளார்.