தலைமை பொறியாளர் வீட்டில் கொள்ளை... 59 சவரன் நகைகளுடன் 2 பேர் கைது...

துடியலூர் அருகே தலைமை பொறியாளர் வீட்டில் இருந்த 59 சவரன் நகை மற்றும் நான்கரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தலைமை பொறியாளர் வீட்டில் கொள்ளை... 59 சவரன் நகைகளுடன் 2 பேர் கைது...

கோவை மாவட்டம், துடியலூர் அடுத்த இடைளர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபால்ராஜூ. இவர் ரயில்வே தலைமை பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவருடைய வீட்டு ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 59 சவரன் நகை மற்றும் நான்கரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நெய்வேலியை சேர்ந்த கண்ணன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.