நீண்டகால மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு... வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்...

தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நீண்டகால மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு... வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்...

தமிழக மீனவர்கள் கப்பலை இலங்கை கடற்படையினர் விரட்டியடிக்கும் முயற்சியில், மூழ்கி போன கப்பலில் காணாமல் போன மீனவரை உடனடியாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கடந்த 18 ஆம் தேதிஅன்று மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடிக் கப்பலை இலங்கை கடற்படையினர் துரத்தியபோது மூழ்கியதாகவும், அதிலிருந்து மூன்று மீனவர்களில் இரண்டு மீனவர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள ஒரு மீனவரை தேடும் பணி 18 ஆம் தேதியில் இருந்து முதல் நடைபெற்று வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
மீட்கப்பட்ட இரண்டு மீனவர்களுக்கு மறுவாழ்வு அளித்திடவும், காணாமல் போன மீனவரை கண்டுபிடித்திடவும் உரிய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்  கேட்டுக் கொண்டுள்ளார் மு.க.ஸ்டாலின்,  இதுபோன்ற துயர சம்பவங்கள் நீண்டகாலமாக தொடர்ந்து நிகழ்ந்து வருவதால் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வெளியியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் வலியுறுத்தி உள்ளார்.