சாலையில் நின்றவர்களுக்கு முககவசம் அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய முதல்வர்!

சாலையோர பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முககவசம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

சாலையில் நின்றவர்களுக்கு முககவசம் அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய முதல்வர்!

கொரோனா பெருந்தொற்று உலக மக்களையே வாட்டி வதைத்து வருகிறது .தற்போது கொரோனா தொற்று உருமாறி மக்களை கடு ம் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளது. மத்திய மாநில அரசுகளும் கொரோனா கட்டுப்பாட்டை மேம்படுத்தி வருகிறது.

 ஆனாலும் அதன் வீரியத்தை உணராத பொதுமக்கள் சிலர் முக கவசம் அணியாமல் ,சமூக இடைவெளியை பின்பற்றாமல் .வீதிகளில் சுற்றி திரிகின்றனர்.இதனால் கொரோனா தொற்று அவர்களை மட்டும் பாதிக்காமல் அவர்களை சார்ந்து உள்ளவர்களையும் பாதிக்கின்றது.

 இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது நியாயவிலை கடைகளில் முக கவசம் அணியாமல் இருந்த நபருக்கு தானே முக கவசம் அணிவித்து அதன் அவசியம் குறித்தும் அறிவுரை வழங்கியுள்ளார்.