சமத்துவ புற வீடுகளை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சிவகங்கை மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட சமத்துவ புற வீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பயணாளிகளுக்கு வழங்கினார். 

சமத்துவ புற வீடுகளை  திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கோட்டை வேங்கைப்பட்டி கிராமத்தில் 100 வீடுகளை கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரம் 10 ஆண்டுகளுக்கு  முன்பு கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பயணாளிகளுக்காக திறந்து வைத்தார். வீடுகளை பயணாளிகளின் கைகளை கொண்டே முதலமைச்சர் திறக்க வைத்த சம்பவம் பயணாளிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பின் வீட்டின் உள் சுற்றிப்பார்த்த முதல்வர் பயணாளிகளுடன் கலந்துரையாடி அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தார்.  இதையடுத்து சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை திறந்து வைத்த அவர், சிறுவர் சிறுமிகள் பூங்காவில் ஓடி ஆடி விளையாடுவதை பார்த்து ரசித்த வண்ணம் நின்றார். அப்போது ஆனந்தத்தின் மிகுதியால் ஊஞ்சலில் அமர்ந்திருந்த சிறுவனுக்கு முதல்வர் ஊஞ்சலை ஆட்டி விட்ட சம்பவம் அங்குள்ளோரை நெகிழ செய்தது. முன்னதாக சிறுவர் சிறுமிகளுக்கு முதல்வர் இனிப்புகளை வழங்கினார். 

பின்னர் அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதலமைச்சர், ஏற்கனவே முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார்.