ஊட்டியில் நடைபெறும் 124-வது மலர் கண்காட்சியை... முதலமைச்சர் மு.க.ஸ்டானில் இன்று துவக்கி வைப்பு!

ஊட்டியில் 124-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.

ஊட்டியில் நடைபெறும் 124-வது மலர் கண்காட்சியை... முதலமைச்சர் மு.க.ஸ்டானில் இன்று துவக்கி வைப்பு!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுல்லா பயணிகளை கவரும் வகையில் 124-வது மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார். இன்று தொடங்கி அடுத்த 5 நாட்களுக்கு இந்த மலர் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதனைக் காண்பதற்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல ஏராளமான கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையில் தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு மலர் கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்செடிகள் நடவு செய்யப்பட்டு தற்போது பல வண்ணங்களிலான பூக்கள் பூத்து குலுங்குகின்றன.