பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு..க ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

 பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடிடும் வகையில்,  அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சுமார் 1088 கோடி ரூபாய் செலவில்  அரசு வழங்கும்  பரிசு தொகுப்பு நாளை முதல் நியாய விலைக்கடைகளில் விநியோகிக்கப்படவுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். பொங்கல் பரிசுத் தொகுப்பினை இடைவிடாமல் தொடர்ந்து விநியோகம் செய்திட ஏதுவாக, நியாய விலைக் கடைகளுக்கான விடுமுறை தினமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகமும் கடந்த 2 நாட்களாக நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.