மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி...
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருக்கிறார்.
கிறிஸ்துமஸ் பெரு விழாவை முன்னிட்டு முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடைபெற்றது. பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்பொது கொளத்தூர் மட்டுமின்றி தமிழகம் திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை எடுத்துரைத்தார்.
தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளில் 300 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைசசர் தெரிவித்தார். 5 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 5 மாதத்தில் செய்து முடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். திமுகவுக்கு வாக்களிக்கவில்லையே என்று வருத்தப்படும் அளவிற்கு பணியாற்றி வருவதாக மு.க. ஸ்டாலின் கூறினார்.
மேலும் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற அனைத்து மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார்.இதை தொடர்ந்து சுமார் 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஒவ்வொருவருக்கும் 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 15 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.