நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு...!

நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு...!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நான்கு மா வட்ட ஆட்சியர்களுடன் ஆய் வு மேற்கொண்டு வருகிறார்.

நான்கு நாள் பயணமாக நாகை , திரு வாரூர் மா வட்டங்களுக்கு சென்றுள்ள முதலமைச்சர் நேற்று காலை திருக்கு வளை அரசுத் தொடக்கப் பள்ளியில் விரி வுபடுத்தப்பட்ட காலை உண வுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நாகை ஆட்சியர் அலு வலகத்தில் அம்மா வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து இன்று நாகை மா வட்ட ஆட்சியர் அலு வலகத்தில் முதலமைச்சரின் கள ஆய் வுத் திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திரு வாரூர் மற்றும் தஞ்சா வூர் ஆகிய மா வட்டங்களின் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதையும் படிக்க : தரம் இல்லாத சாலை; பொதுமக்கள் போராட்டம்!

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் எ. வ. வேலு, கே.என்‌.நேரு, ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், ரகுபதி, உதயநிதி ஸ்டாலின், நாகை மா வட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், திரு வாரூர் மா வட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ, மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி, தஞ்சா வூர் ஆட்சியர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

நான்கு  மா வட்டங்களிலும் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள், புதிய திட்டங்களுக்கான மதிப்பீடுகள், நிலு வையில் உள்ள மத்திய மாநில அரசுத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.