பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் மறைவு...இரங்கல் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர்...!

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் மறைவு...இரங்கல் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர்...!

பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல், மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.

இதையும் படிக்க : தாம்பரம் - கன்னியாகுமாி இடையே சிறப்பு ரயில் இயக்கம்...தெற்கு ரயில்வே அறிவிப்பு!

இதையடுத்து அவரது மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், பிரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், மூத்த தலைவரும், ஐந்து முறை பஞ்சாப் முதலமைச்சராகவும் இருந்த பிரகாஷ் சிங் பாதலின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்திய அரசியல் மற்றும் பஞ்சாபின் நலனுக்காக அவர் ஆற்றிய செழுமையான பங்களிப்புகள் எப்போதும் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.