2 ஆண்டுகளில் பல லட்சம் மனுக்களுக்கு தீர்வு...முதலமைச்சர் பெருமிதம்!

2 ஆண்டுகளில் பல லட்சம் மனுக்களுக்கு தீர்வு...முதலமைச்சர் பெருமிதம்!

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், முகவரி திட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறினார். 

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சிக்கு என்னென்ன திட்டங்கள் தேவையோ அவற்றையெல்லாம் அனைவரின் ஒத்துழைப்போடு நிறைவேற்றி இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைவதாக முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். மேலும் அரசின் திட்டப்பணிகள் சுனாமி வேகத்தில் நடந்து வருவதாகவும் கூறினார்.

இதையும் படிக்க : அதிகாரிகளிடம் வாக்குவாதம்...11 தீட்சிதர் மீது போலீசார் வழக்குப்பதிவு...!

திட்டங்களை அறிவிப்பதோடு மற்றும் நின்று விடாமல் அவற்றை தொடர்ந்து நிறைவேற்றி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதிலும் நாம் தனி கவனம் செலுத்த வேண்டும் என கேட்டு கொண்டார். 

தொடர்ந்து பேசிய அவர், திட்டப் பணிகளை துரிதமாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 
தமிழ்நாட்டை வளமான மாநிலமாக உருவாக்க  அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.