ஆயிரத்து 600 ஏக்கரில் ஜவுளி பூங்கா...கருத்தரங்கில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

விருதுநகர் சிப்காட்டில் ஆயிரத்து 600 ஏக்கரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என பன்னாட்டு தொழில்நுட்ப ஜவுளிகள் கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருத்தரங்கில் பேசிய முதலமைச்சர்:
பன்னாட்டு தொழில்நுட்ப ஜவுளிகள் கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது சென்னையில் ஜவுளி நகரம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். தொடர்ந்து, நூற்பாலை ஊழியர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும், எனவும், புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கையை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து:
விருதுநகர் சிப்காட்டில் ஆயிரத்து 600 ஏக்கரில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் எனவும், அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: ஈபிஎஸ் என்ன வேண்டுமானாலும் பேசுவார்...இதுக்காக தான் ஆளுநருடனான சந்திப்பு...அமைச்சர் கொடுத்த பகீர்!
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் 4 பெரிய பன்னாட்டு விமான நிலையங்கள், 2 உள்நாட்டு விமானநிலையங்கள், 3 துறைமுகங்கள் மற்றும் 19 சிறு துறைமுகங்கள் தமிழ்நாட்டில் உள்ளதாகவும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு 2வது இடத்திலும், ஏற்றுமதியில் 3வது இடத்திலும் உள்ளதாகவும், தமிழ்நாடு அனைத்து முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் மாநிலமாக திகழ்வதாகவும் கூறினார்.
முதலீட்டாளர்கள் உதவ வேண்டும்:
மேலும், மாமல்லபுரத்தில் 30 கோடி ரூபாயில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்கப்படும், கரூர், திருப்பூர், காஞ்சிபுரத்தில் ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து 2030ஆம் ஆண்டு ஒரு டரில்லியன் டாலர் என்ற இலக்கை எட்ட முதலீட்டாளர்கள் உதவ வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுகொண்டார்.
"காயமடைந்த தனது தந்தையை ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு வந்திருந்தால் முதலுதவி அளித்து உயிரை காப்பாற்றி இருக்கலாம்" என பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்த விபத்தில் உயிரிழந்த கந்தசாமியின் மகன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில், நேற்று மாலை நகரின் பல்வேறு இடங்களில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மழை காரணமாக சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப வந்தவர்கள் மழைக்கு ஒதுங்கியவர்கள் சுமார் 30 க்கும் மேற்பட்டோர் அங்கு இருந்தனர். பலத்த காற்று காரணமாக பெட்ரோல் பங்கில் உள்ள இரும்பு மேற்கூரை சரிந்து விழுந்தது. அதில் 30 க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிக்கினர்.
அவர்களை மீட்க அக்கம் பக்கதினர் போராடினர். எனினும் மேற்கூரை கணமாக இருந்ததால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இடிபாடிகளில் சிக்கியவர்கல் மீட்கப்பட்டனர். இந்த திடீர் விபத்தால் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்த கந்தசாமி என்பர் பலத்த காயமடைந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் கந்தசாமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
காயம்பட்ட தனது தந்தையை ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு செல்லாமல் ஆடு, மாடு போல் ஒரு ஆம்னி பேருந்தில் அருகில் இருக்கின்ற மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு சென்றிருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பிருந்திருக்கும் என உயிரிழந்த கந்தசாமி மகன் தெரிவித்தார். 9 வருடமாக இந்த பெட்ரோல் பங்கில் பணிபுரிந்த தனது தந்தையை மனிதாபிமானமாக கூட உயிரை காப்பாற்றமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளது. பெட்ரோல் பங்க் நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசு கருணை அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும் என கந்தசாமியின் மகன் கேட்டுக் கொண்டார்
இந்த விப்த்தில் மொத்தம் 20 பேர் காயமடைந்த நிலையில் ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். ஒருவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் 11 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிக்க: தடையை மீறி போராட்டம்...கன்னட அமைப்பினரை கைது செய்த போலீசார்...!
மாமல்லபுரத்தில் உள்ள பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் மாமல்லபுரத்திற்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளி மாநிலம் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம், அப்படி மாமல்லபுரத்தை சுற்றிப் பார்க்க வரும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதிகளில் தங்குவதும் அங்குள்ள கடைகளில் உணவருந்துவதும் வாடிக்கையான ஒன்று. இந்நிலையில் மாமல்லபுரத்தில் உள்ள நிஹால் ஆம்பூர் பிரியாணி கடையில் நேற்று மதியம் பிரியாணி சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அருகில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கும் போது கெட்டுப்போன கோழி இறைச்சி பயன்படுத்தி சமைக்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்டதால் இந்த உபாதைகள் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து சமூக அலுவலர் கூறுகையில், இந்த பிரியாணி கடை மீது ஏற்கனவே 8 மாதங்களுக்கு முன்பு இதேபோன்று புகார் வந்ததாகவும் இது குறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் இந்த கடை மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டு வந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் பிரியாணி சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது என பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ரகுபதிக்கு தகவல் தெரிவித்தும் இதுவரையில் எந்த விசாரணையும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.
இதுபோன்று மக்கள் உயிரோடு விளையாடக்கூடிய சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிக்க: தடையை மீறி போராட்டம்...கன்னட அமைப்பினரை கைது செய்த போலீசார்...!
ஆந்திர, தமிழக எல்லையில் உள்ள வனப்பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டி சென்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மருந்து கடை உரிமையாளரை பேரணாம்பட்டு வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள தமிழக ஆந்திரா எல்லையான பத்தலப்பல்லி வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலாவதியான மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை கொட்டி விட்டு சென்றுள்ளனர். மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் வைரலானது.
இது குறித்து தகவலறிந்த வேலூர் மாவட்ட வன அதிகாரி கலாநிதி உனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பேரணாம்பட்டு வனத்துறையினர்க்கு உத்தரவிட்டார். இதனையடுத்து பேரணாம்பட்டு வனத்துறையினர் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட வனப்பகுதியில் சோதனை செய்தனர்.
மேலும் மருத்துவ கழிவுகளில் மருந்து சீட்டு கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக மருந்து சீட்டில் காணப்பட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு வனத்துறையினர் பேசி அந்த நபரை வனத்துறையினர் பேரணாம்பட்டு வனசரக அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். அருகே உள்ள கோரமண்டல் பகுதியில் மருந்து கடை நடத்தி வரும் ராஜேந்திர பிரசாத் (48) என்றும் கடந்த 5 தினங்களுக்கு முன்பு மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து தமிழக ஆந்திரா எல்லையிலுள்ள பத்தலப் பல்லி வனப்பகுதியில் கொட்டி விட்டு சென்றுள்ளார் என்பதும், மருந்து சீட்டின் மூலம் பேரணாம்பட்டு வனத்துறையினரிடம் சிக்கியதும் தெரியவந்தது.
பத்தலப்பல்லி காப்புக் காட்டில் அத்துமீறி நுழைந்து வனவிலங்கள் பாதிக்கும் வகையில் மருத்துவ கழிவுகளை கொட்டியதாக மருந்து கடை உரிமையாளர் ராஜேந்திர பிரசாத்தை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: தடையை மீறி போராட்டம்...கன்னட அமைப்பினரை கைது செய்த போலீசார்...!
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மாலை முதல் தொடர்ந்து காற்று, இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
டெல்லி, மும்பை, பெங்களூரு, கோவா, கோவை, அபுதாபி, புனே, ராஞ்சி, ஐதராபாத், கொல்கத்தா உள்பட 10 விமானங்கள், பலத்த மழை பெய்ததால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன.
வானிலை சீரானதும் வட்டமடித்து பறந்து கொண்டிருந்த விமானங்கள் ஒன்றின் பின் ஒன்றாக தரையிறங்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதுப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி, ஐதராபாத், அபுதாபி உள்பட 6 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டு இருந்தால் விமான சேவைகள் சற்று பாதிக்கப்பட்டதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அரசியல் கட்சிகளாக இல்லாமல் அவரவர் குடும்ப நலனுக்காக மட்டுமே பாடுபடுவதாக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் பகுதியில், தாயே கடல் தாயே, தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்பொழுது பேசிய அவர், "கர்நாடகாவில் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்து அனைத்து கட்சியும் ஒருங்கிணைந்து போராடுகின்றன. ஆனால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அரசியல் கட்சிகளாக இல்லாமல், அவரவர் குடும்ப நலனுக்காக மட்டுமே பாடுபடுகின்றனர்" என விமர்சித்துள்ளார்.
மேலும், "கர்நாடகாவில் தமிழக முதலமைச்சரை அவமரியாதை செய்கின்றனர், இதை ஒரு திமுக கட்சிக்காரர்கள் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. நான் மட்டும்தான் கண்டனம் தெரிவித்துள்ளேன்" எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க || "அதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகளை வாங்கதால் பழைய பேருந்துகளை இயக்கவேண்டியுள்ளது" அமைச்சர் சிவசங்கர்!!