3,000 முத்தங்களால் வரையப்பட்ட முதல்வரின் உருவப்படம்

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், மூன்றாயிறம் முத்தங்களைப் பதித்து முதலமைச்சரின் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார்.

3,000 முத்தங்களால் வரையப்பட்ட முதல்வரின் உருவப்படம்

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், மூன்றாயிறம் முத்தங்களைப் பதித்து முதலமைச்சரின் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்த நரசிம்மன், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் உருவப்படத்தை பிக்மண்ட் என்ற கலவை கொண்ட பெயிண்டால், 3 ஆயிரம் முத்தங்களை பதித்து வரைந்துள்ளார், நரசிம்மன்.

இந்த படத்தை 16 அடி நீளமும், எட்டரை அடி அகலம் கொண்ட துணியில் வரைந்து சாதனை படைத்துள்ளார். இந்த ஓவியம் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.