புதரில் வீசப்பட்ட குழந்தை - கை, கால்களை கடித்துக் குதறிக் கொன்ற நாய்

புதரில் வீசப்பட்ட குழந்தை - கை, கால்களை கடித்துக் குதறிக் கொன்ற நாய்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் ரயில் தண்டவாளத்தின் அருகே கிடந்த, பிறந்து சில நாட்களே ஆன குழந்தையை நாய் கடித்துக் குதறி கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.

நாடியம்மன் கோவில் அருகே மருத்துவமனை சாலையின் ரயில் தண்டவாளத்தை ஒட்டிய புதர் ஒன்றில் குழந்தை போடப்பட்டுச் சென்றதாக தெரிகிறது.

இதைக் கண்ட நாய் ஒன்று அங்கிருந்து குழந்தையை வெளியே இழுத்த வந்து கை, கால்களை கடித்துக்குதறி அங்கேயே போட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

குழந்தை உயிரிழந்த நிலையில், அப்பகுதி மக்களின் தகவலின் பேரில் சம்பவ இடம் சென்று அதனை மீட்ட போலீசார் குழந்தையை வீசிச் சென்றவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.