நடுரோட்டில் பைக்கை கவிழ்த்து போட்டு அதன் மீது அமர்ந்தபடி போன் பேசி அலப்பறை செய்த போதை ஆசாமி.....காண்டான வாகன ஓட்டிகள்....!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குடிபோதையில் சாலையின் நடுவே அலப்பறை செய்த குடிமகனால் பரபரப்பு ஏற்பட்டது.

நடுரோட்டில்  பைக்கை கவிழ்த்து போட்டு அதன் மீது அமர்ந்தபடி போன் பேசி அலப்பறை செய்த போதை ஆசாமி.....காண்டான வாகன ஓட்டிகள்....!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள  எடையார் சாலையில் இன்று மது போதையில் ஒருவர் தான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சாலையில் நடுவே போட்டு, வாகனத்தின் மீது அமர்ந்தபடி கால்மேல் கால் போட்டு செல்போன் பேசி கொண்டிருந்தார்.

இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் அங்கிருந்த வாகன ஓட்டிகள் மதுபோதையில் இருந்தவரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இது போன்ற சம்பவங்கள் காட்டுமன்னார் கோவில் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.