இரு சமூகத்தினர் இடையே மோதல்...! மூன்று பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு...!

வடலூர் : இரு சமூகத்தினர் இடையே மோதல் நடந்த நிலையில், மூன்று பேருந்துகளின் கண்ணாடிகளை கல்வீசி உடைத்துள்ளனர்.

இரு சமூகத்தினர் இடையே மோதல்...! மூன்று பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு...!

வடலூர் அருகே நள்ளிரவில், மருவாய் கிராமத்தில் இரு சமூகத்தினர் இடையே மோதல் நடந்த நிலையில், மூன்று பேருந்துகளின் கண்ணாடிகளை கல்வீசி உடைத்துள்ளனர். இதனால் வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 16 பேரை கைது செய்தனர்.  

கடலூர் மாவட்டம், வடலூர் அருகே மருவாய் கிராமத்தில் நேற்று விடுதலை சிறுத்தை கட்சியின் கொடிக்கம்பத்தை உடைத்து சேதப்படுத்தி உள்ளதாக கூறி விடுதலை சிறுத்தை கட்சியினர், நேற்று இரவு பண்ருட்டி - கும்பகோணம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவ்வழியாக வந்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சாலை மறியலில் ஈடுபட்டவரிடம் பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மர்ம நபர்கள் நேற்று இரவு, சாலையில் கற்களை எரிந்தும் 3 பேருந்துகளின் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். பின்னர் இது குறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில், அவர்கள் மீது எஸ்சி, எஸ்டி மற்றும் பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் 16 பேரை வடலூர் போலீசார் கைது செய்தனர்.