ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நிறைவு விழா...லெப்டினன்ட் ஜெனரலாக பதவி ஏற்ற இளம் ராணுவ அதிகாரிகள்!

ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நிறைவு விழா...லெப்டினன்ட் ஜெனரலாக பதவி ஏற்ற இளம் ராணுவ அதிகாரிகள்!

ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், பயிற்சி முடிந்த இளம் ராணுவ அதிகாரிகளின் நிறைவு நாள் அணிவகுப்பு விழா நடைபெற்றது. 


சென்னை, பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்திய நாட்டை சேர்ந்த இளம் ராணுவ அதிகாரிகள் மட்டுமின்றி நட்பு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், 11 மாத பயிற்சியின் நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்களாதேஷ் ராணுவத்தின் தலைமை அதிகாரி ஷஃப்யூதின் அமீது கலந்து கொண்டு, இளம் ராணுவ அதிகாரிகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.  

இதையும் படிக்க : அரசியல் பேச மனம் நினைக்கிறது; அனுபவம் வேண்டாம் என மறுக்கிறது - ரஜினிகாந்த பேச்சு!

இதில், பயிற்சி முடித்த 186 பேர் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி ஏற்றனர். பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. பின்னர் மூன்று ஹெலிகாப்டர்களில் வானில் வட்டமடித்து, பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர்.